நெருங்கும் தெலங்கானா சட்டமன்ற தேர்தல் : காங்.தலைவர் ராகுல், சோனியா காந்தி தீவிர பிரசாரம்

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மற்றும் சோனியா காந்தி உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
நெருங்கும் தெலங்கானா சட்டமன்ற தேர்தல் : காங்.தலைவர் ராகுல், சோனியா காந்தி தீவிர பிரசாரம்
x
தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மற்றும் சோனியா காந்தி உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். தெலங்கானா மாநிலத்தில் வருகிற டிசம்பர் 7 - ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு வாக்கு சேகரித்த சோனியா காந்தி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி, விவசாயிகளை புறக்கணிப்பதாக புகார் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தெலங்கானா மாநிலம், உருவானதற்கு சோனியா காந்தியின் ஆதரவும் ஒரு காரணம் என்றார். தெலுங்கானாவில் புதிய அரசு உருவானால், விவசாயிகளின் துயர் தீரும் என்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்