"எங்களிடம் உள்ளது, கிருஷ்ண பரமாத்மா ஊதுகுழல்" - திமுக குற்றச்சாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலடி

"யாருக்கும் தீமை செய்யாது - நன்மையே செய்யும்"
எங்களிடம் உள்ளது, கிருஷ்ண பரமாத்மா ஊதுகுழல் - திமுக குற்றச்சாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலடி
x
கஜா புயலை முன்னிட்டு, 13 கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,  தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 சட்டமன்ற தொகுதிகள் மட்டுமல்ல, 234 தொகுதிகளிலும் சீரான அளவில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருவதாகவும், அரசியல் லாபத்திற்காக தினகரன் அணியினர் அரசை விமர்சிப்பதாகவும் அவர் குற்றஞ் சாட்டினார். பாஜகவின் ஊதுகுழல் போல அதிமுக செயல்படுவதாக திமுக குற்றம் சாட்டி உள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஒ. பன்னீர்செல்வம், எங்களிடம் உள்ள ஊதுகுழல், கிருஷ்ண பரமாத்மாவிடம் உள்ள ஊதுகுழல் போன்றது, நன்மை மட்டுமே செய்யும், தீமை செய்யாது என்று தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்