மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் போராட்டம்

உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசை கண்டித்து, நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் சார்பில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் போராட்டம்
x
2016 ம் ஆண்டு, நவம்பர் 8 ம் தேதி, இரவு, ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை, பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்து 3 வது ஆண்டு துவங்குவதை குறிக்கும் வகையில், நாளை  நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி, புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடி சீர்குலைத்து விட்டதாக அவர் குறிப்பிட்டார். கருப்பு பணம் ஒழிப்பு - பயங்கரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுத்தல் - கள்ள நோட்டுக்களை அழித்தல் ஆகிய 3 நோக்கங்களையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று மனீஷ் திவாரி குற்றஞ்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்