அவதூறு வழக்கில் அன்புமணி நேரில் ஆஜர்
முன்னாள் மத்திய அமைச்சரும் பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி மீதான அவதூறு வழக்கில், இன்று அவர் நேரில் ஆஜரானார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி மீதான அவதூறு வழக்கில், இன்று அவர் நேரில் ஆஜரானார். சென்னை ஆட்சிய அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன்பு அவர் ஆஜரானார். இதையடுத்து, வழக்கின் அடுத்தடுத்த விசாரணைகளின்போது, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், அன்புமணி மீதான அவதூறு வழக்கு விசாரணை, வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Next Story

