தே.மு.தி.கவில் அதிரடி மாற்றங்கள்...தேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா..
தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
* தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் நடந்த கூட்டத்தின் முடிவில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
* இதுவரை பொருளாளராக இருந்த இளங்கோவன் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல கொள்கை பரப்பு செயலாளராக இருந்த வி.சி.சந்திரகுமார் திமுகவில் இணைந்ததால், அந்த இடம் வெற்றிடமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் அழகாபுரம் மோகன்ராஜ் புதிய கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரேமலதா, இதுவரை கட்சியின் உறுப்பினரகா மட்டுமே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story