ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு : கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி சொத்துக்கள் முடக்கம்

ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் வங்கி முதலீடுகளை அமலாக்கத்துறை இன்று அதிரடியாக முடக்கியுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு : கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி சொத்துக்கள் முடக்கம்
x
ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் சுமார் 54 கோடி ரூபாய் மதிப்பிலான கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான கொடைக்கானல், நீலகிரி, டெல்லி மற்றும் அயல்நாடுகளில் உள்ள சொத்துக்கள் மற்றும் வங்கி முதலீடுகளை அமலாக்கத்துறை இன்று அதிரடியாக முடக்கியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்