48 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது? - நிர்மலா சீதாராமன்

கடந்த 48 ஆண்டுகளாக மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு செய்யாத காரியங்களை, 48 மாதங்களில், பாஜக ஆட்சி நிறைவேற்றி சாதனை படைத்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
48 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது? - நிர்மலா சீதாராமன்
x
சென்னையில் பாஜக வணிகர் அமைப்பு சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய நிர்மலா சீதாராமன், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், ஊழல் உச்சத்தை எட்டி இருந்ததாகவும், தகுதி இல்லாதவர்களுக்கு வங்கியில் கடன் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். கடனை திரும்ப செலுத்தாவர்கள் மீது பாஜக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார். 



Next Story

மேலும் செய்திகள்