நீதிமன்ற அவமதிப்பு - ஹெச்.ராஜா தரப்பு முறையீடு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா தரப்பு முறையீடு செய்தது.
தலைமை நீதிபதி தஹில் ராமனி, துரைசாமி அமர்வு முன்பு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் தினகரன் முறையீடு செய்தார். உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தான் தாமாக முன்வந்து வழக்கு தொடர முடியும் எனவும் நீதிபதி செல்வம் தலைமையிலான அமர்வு தன்னிச்சையாக வழக்கு தொடர முடியாது எனவும் முறையீடு செய்தார். இதனை கேட்ட தலைமை நீதிபதி, அவமதிப்பு வழக்கு தொடர்பான உத்தரவு நகலை தாக்கல் செய்தால், ஆய்வு செய்து முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.
Next Story