எம்.பிக்கள்,எம் .எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தொடக்கம்...

எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
எம்.பிக்கள்,எம் .எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தொடக்கம்...
x
உயர்நீதிமன்ற நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். இந்த சிறப்பு நீதிமன்ற செயல்பாட்டிற்கு 97 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 17 பணியாளர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். முதல் நாளான இன்று, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போதைய தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது 2011ஆம் ஆண்டு தொடர்ந்து அவதூறு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சாந்தி, அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்