"உள்ளாட்சி துறைக்கான நிதி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி" - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக உள்ளாட்சி பணிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளாட்சி துறைக்கான நிதி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி - பொன்.ராதாகிருஷ்ணன்
x
தமிழக உள்ளாட்சி பணிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பொன்.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியிடம் தான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமிழக நகர்புறங்களுக்கு 631 கோடியே 98 லட்ச ரூபாயும், கிராமப்புறங்களுக்கு 758 கோடியே 6 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக தமிழக மக்கள் சார்பில் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பொன். ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்