"ஊடுருவல்காரர்களை காங்கிரஸ் ஊக்குவிக்கிறது" - அமித்ஷா கடும்தாக்கு

இந்தியாவுக்குள் ஊடுருவலை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆதரிப்பதாக அமித் ஷா குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஊடுருவல்காரர்களை காங்கிரஸ் ஊக்குவிக்கிறது - அமித்ஷா கடும்தாக்கு
x
விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர், ராகுல் காந்தியின் கொள்ளுத் தாத்தா நேரு, பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜிவ் காந்தி, தாயார் சோனியா ஆகியோர் 70 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த போதிலும் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள், தங்கள் உரிமைகளை பெற எதுவும் செய்யவில்லை என குற்றஞ்சாட்டினார். மேலும், இந்தியாவுக்குள் ஊடுருவல்காரர்களை அனுமதிக்க காங்கிரஸ் கட்சி விரும்புவதாகவும், எந்தவொரு ஊடுருவலையும் பா.ஜ.க எதிர்ப்பதாகவும் அமித் ஷா தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்