விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பை அளிக்க தயாராக உள்ளேன் - அமைச்சர் விஜயபாஸ்கர்

அரசியல் எதிரிகளால் உருவாக்கப்படும் சூழ்ச்சிகளில் இருந்து வெளியே வருவேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பை அளிக்க தயாராக உள்ளேன் - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
குட்கா முறைகேடு விவகாரத்தில் சிபிஐ சோதனை நடத்தியுள்ள நிலையில், அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

* அதில், குட்கா மற்றும் பான்மசாலா தொடர்புடைய மாதவ்ராவ் என்ற நபரை தான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சந்திக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

* சட்டத்தை ஏற்று நடக்கும் குடிமகன் என்ற அடிப்படையில் எந்த விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பை அளிக்க தயாராக உள்ளதாகவும், 

* தற்போது நடந்த சோதனைக்கும், முழு ஒத்துழைப்பை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

* "காய்ந்த மரம் தான் கல்லடி படும்" என்று கூறியுள்ள அவர், இதுபோன்ற குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

* "தனக்கு மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை" என்றும், 

* இந்தப் பிரச்சினையையும் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொண்டு வெளிவருவேன் என்றும் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்