மீனவர் சங்க தேர்தல் நிறுத்தம் : வலுக்கிறது மதுசூதனன் - ஜெயக்குமார் மோதல்
சென்னை - ஆர்.கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட மீனவ பகுதிகளுக்கான கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஆதரவாளர்களுக்கும் மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
சென்னை - ஆர்.கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட மீனவ பகுதிகளுக்கான கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஆதரவாளர்களுக்கும் மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காசிபுரம், சிங்காரவேலர் நகர், புதுமனை குப்பம், பவர் குப்பம் உள்ளிட்ட 20 இடங்களுக்கான மீனவ கூட்டுறவு சங்க இயக்குநர்கள் 7 பேரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனு தாக்கல் காலையில் துவங்கியது. முடிவில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை உருவானதால் இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
Next Story