ஏர்செல் மேக்சிஸ் வழக்கு அக்.8ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு அக்.8ம் தேதிக்கு ஒத்திவைப்பு
x
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது.இது தொடர்பாக வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. ப.சிதம்பரம் தரப்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான கபில்சிபல் ஆஜரானார். இதையடுத்து, எதிர்தரப்பில் வழக்கறிஞரின் உடல்நலக் குறைவு காரணமாக விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, ஏர்செல் மேக்சிஸ் தொடர்பான 4 வழக்குகளும் அக்டோபர் 8ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். இது தொடர்பான இடைக்கால உத்தரவு மற்றும் ப.சிதம்பரத்தின் இடைக்கால ஜாமினும் தொடரும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்