தெலுங்கு தேச எம்.பி. ராமரைப் போல் வேடமணிந்து போராட்டம்

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தெலுங்கு தேச எம்.பி. ராமரைப் போல் வேடமணிந்து போராட்டம்
x
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கோரி, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி,நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று நடைபெற்ற போராட்டத்தின்போது, நரமல்லி சிவபிரசாத் என்ற தெலுங்கு தேசம் எம்.பி, ராமரைப் போல் வேடமணிந்து, கையில் வில்லுடன் கலந்து கொண்டார். இவர் ஏற்கனவே, மேஜிக் நிபுணர் போலவும், பெண் வேடமிட்டும், பள்ளி மாணவன் போலவும் பல்வேறு விதமாக போராட்டத்தில் கலந்து கொண்டு, பலரது கவனத்தை ஈர்த்து வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்