"பசுமை வழிச்சாலை திட்டம் சேலத்துக்கானது அல்ல" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை- சேலம் இடையிலான பசுமை வழிச்சாலை திட்டத்தை சிலர் திட்டமிட்டு நிறுத்த முயற்சிப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
பசுமை வழிச்சாலை திட்டம் சேலத்துக்கானது அல்ல - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி
x
கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது என்பது நியாயமா? என கேள்வி எழுப்பினார். நிபுணர் குழு அமைத்து, ஆய்வு செய்து மாற்றுப்பாதையில் திட்டத்தை செயல்படுத்த ஆவண செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, பசுமை வழிச்சாலை திட்டம் சேலத்துக்கானது போல் சிலர் தவறான கருத்துகளை பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார். நிலம் கையகப்படுத்த 90 சதவீதம் பேர் சம்மதித்துள்ள நிலையில்,10 சதவீதத்தினர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறிய முதலமைச்சர், அவர்கள் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என விளக்கம் அளித்தார். தி.மு.க ஆட்சி காலத்தில் கொடுத்ததைவிட அதிக இழப்பீடு வழங்கப்படும் எனவும், பசுமை வழிச்சாலை திட்டம் நிறைவேற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்