மொழிப்போர் தியாகியின் பேத்திக்கு ஸ்டாலின் நிதியுதவி

உயர்கல்வி பயிற்சிக்கு ரூ.1 லட்சம் வழங்கினார்
மொழிப்போர் தியாகியின் பேத்திக்கு ஸ்டாலின் நிதியுதவி
x
மொழிப்போர் தியாகி அரங்கநாதன் பேத்திக்கு, உயர்கல்வி படிப்பிற்கான பயிற்சியில் சேர ஸ்டாலின், 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.மறைந்த மொழிப்போர் தியாகி அரங்கநாதன்  பேத்தி கோமதி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1129 மதிப்பெண்கள் பெற்றிருந்தும், நீட் தேர்வில் தோல்வியடைந்தார். அதன் காரணத்தால் தன்னுடைய மருத்துவக் கனவு பறிபோன நிலையில், உயர்கல்வி படிப்பிற்கான பயிற்சியில் சேர உதவுமாறு திமுக செயல் தலைவரிடம் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று, மாணவி கோமதிக்கு அவருடைய உயர்கல்வி பயிற்சியில் சேர்வதற்கான மொத்த தொகை 1 லட்சம் ரூபாயை ஸ்டாலின் வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்