கூடங்குளம் அணுமின் நிலையத்திற்காக நிலம் தந்தவர்களுக்கு வேலை" - அமைச்சர் தங்கமணி உறுதி

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்காக, நிலம் கொடுத்தவர்களுக்கு, வேலை கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்காக நிலம் தந்தவர்களுக்கு வேலை -  அமைச்சர் தங்கமணி உறுதி
x
கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்காக, நிலம் கொடுத்தவர்களுக்கு, வேலை கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ராதாபுரம் தொகுதி உறுப்பினர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, கூடங்குளம் அணு உலைக்கு நிலம் வழங்கியவர்களுக்கு, அணு உலையில் வழங்கப்படும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அணுமின் நிலைய நிர்வாகத்திடம், அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்