"விரைவில் காகிதமில்லாத பேரவைக் குறிப்புகள்" - சட்டப்பேரவை தலைவர் தனபால் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் காகிதமில்லாத பேரவைக் குறிப்புகளும், ஏடுகளும் விரைவில் வழங்கப்படும் என்று பேரவைத் தலைவர் தனபால் அறிவித்துள்ளார்.
விரைவில் காகிதமில்லாத பேரவைக் குறிப்புகள் - சட்டப்பேரவை தலைவர் தனபால் அறிவிப்பு
x
தமிழக சட்டப்பேரவையில் காகிதமில்லாத பேரவைக் குறிப்புகளும், ஏடுகளும் விரைவில் வழங்கப்படும் என்று பேரவைத் தலைவர் தனபால் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய ஒரத்தநாடு தொகுதி திமுக உறுப்பினர் ராமச்சந்திரன், இயற்கை வளங்களை அழித்து காகிதங்களை உற்பத்தி செய்வதால் மழை பெய்வது பாதிக்கப்படுவதாக கூறினார். மேலும் காகிதங்கள் வடிவில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகளவு புத்தகங்கள் வழங்குவதால் அவற்றைத் தூக்கிச் செல்வதில் சிரமமாக உள்ளது என்றார். இதற்கு பதிலளித்து பேசிய சட்டப்பேரவை தலைவர் தனபால், காகிதங்கள் இல்லாமல் பேரவைக் குறிப்பேடுகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் எளிதாக தூக்கிச் செல்லும் வகையில் அவைக் குறிப்பேடுகள் விரைவில் அளிக்கப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்