எய்ம்ஸ் மருத்துவமனை அமைய யார் காரணம்? -அன்புமணி
எய்ம்ஸ் மருத்துவமனை அமைய யார் காரணம்? - "2008-ல் அடிக்கல் நாட்டியது நான்" - அன்புமணி
மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தது நாம்தான் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், மதுரை தோப்பூரில் 100 ஏக்கரில் எய்ம்ஸ் அமைக்க முதல் தவணையாக 150 கோடி ஒதுக்கி 2008-ல் அடிக்கல் நாட்டியதும் தாம்தான் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை என அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
மதுரைக்கு 2008-ஆம் ஆண்டில் முதன்முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தது நான் தான் என்பது அரசியல் அனுபவம் கொண்டவர்களுக்கு தெரியும். அப்போது அரசியலை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு எங்கிருந்து தெரியப்போகிறது!🤦♂️
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 24, 2018
Next Story