"ஆளுநருக்கு குந்தகம் விளைவித்தால் 7 ஆண்டு சிறை தண்டனை" - சட்டப்பிரிவை குறிப்பிட்டு, ஹெச்.ராஜா டிவீட்டரில் பதிவு
"ஆளுநருக்கு குந்தகம் விளைவித்தால் 7 ஆண்டு சிறை தண்டனை" - சட்டப்பிரிவை குறிப்பிட்டு, ஹெச்.ராஜா டிவீட்டரில் பதிவு
குடியரசுத் தலைவர், ஆளுநரின் மரியாதைக்கு குந்தகம் விளைவித்தால், 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருப்பதாக, பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார். ஒரு எதிர்க்கட்சி தலைவருக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும் என்றும், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுனரின் மரியாதைக்கு குந்தகம் ஏற்படுத்த நினைத்தால், இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 124-ன் படி 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை உண்டு என்றும் தமது சமூக வளைதள பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு எதிர்கட்சி தலைவருக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும். இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 124 தெளிவாக கூறுகிறது ஜனாதிபதி/ஆளுனரின் மரியாதைக்கு குந்தகம் ஏற்படுத்த நினைத்தால் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை உண்டு. நாமக்கல் காவல்துறை செயல் சட்டப்படி சரி.
— H Raja (@HRajaBJP) June 23, 2018
Next Story