"1991 முதல் 96 வரை ஜெயலலிதாவும் காவிரி குறித்து பேசவில்லை" - ஆ.ராசா

"எம்.ஜி.ஆர் இறக்கும் வரை காவிரி குறித்து பேசியதில்லை" - முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றச்சாட்டு
1991 முதல் 96 வரை ஜெயலலிதாவும் காவிரி குறித்து பேசவில்லை - ஆ.ராசா
x
1971-ஆம் ஆண்டு முதல், முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர், இறக்கும் வரை ஒருமுறை கூட காவிரி விவகாரம் குறித்து பேசியதில்லை என, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூரில் நடைபெற்ற திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆ.ராசா,  1991-ம் ஆண்டு முதல் 96 வரை ஜெயலலிதாவும், காவிரி குறித்து பேசவில்லை என்றார். ஜெயலலிதா பேசினார் என்று நிரூபித்தால் திமுகவை விட்டு தாம் விலகுவேன் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்