"கோயில் உண்டியல் காணிக்கையில் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு 4 சொகுசு கார்கள்.." - பாஜக நிர்வாகி

x

ஈரோடு பண்ணாரி அம்மன் கோயில் காணிக்கை டெபாசிட் செய்யப்படும் நிலையில், அந்தப் பணத்தை எடுத்து சென்னை அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு 4 சொகுசு கார்களை வாங்கியதாக பாஜக நிர்வாகி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. பாஜக தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வக்குமார் இவ்வாறு பதிவிட்ட நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து பண்ணாரி அம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், செல்வக்குமார் வெளியிட்டது முற்றிலும் பொய்யான தவறான செய்தி என்றும், அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

போலீசார் புகார் மனு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்