கோயிலில் அமைச்சருக்கு நேர்ந்த தீண்டாமை..! பூசாரி செயலால் அதிர்ச்சி... வெளியான பகீர் வீடியோ

x

கேரள அமைச்சருக்கு கோயிலில் தீண்டாமை கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள அரசில் பட்டியல், பழங்குடியினர் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் கே.ராதாகிருஷ்ணன். இவர் பையனூர் சிவன் கோயிலில் நடைபந்தலை கடந்த ஜனவரி 26 திறந்து வைத்தார். அப்போது, குத்துவிளக்கு ஏற்றுவதற்கான தீபத்தை தனது கையில் தராமல் பூசாரி அவமதித்ததாக வருத்தம் தெரிவித்தார். தற்போது, ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், குத்துவிளக்கு ஏற்ற காத்திருந்த தன்னிடம் தீபத்தை தராமல் தரையில் வைத்துவிட்டதாக அவர் தெரிவித்தார். மீன் விற்பவரின் கை பட்டு வரும் பணத்தை பூசாரிகள் வேண்டாம் என சொல்வதில்லை. பணத்தில் இல்லாமல் மனிதர்களிடம் மட்டுமே பூசாரிகள் தீண்டாமை பார்ப்பதாகவும் விமர்சனம் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்