"சனாதன தர்மமே அனைத்து தர்மங்களுக்கும் முதன்மையானது"... TTD அறங்காவலர் குழு தலைவர்

x

இந்து சனாதன தர்மம் அனைத்து தர்மங்களுக்கும் முதன்மையான தர்மம் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருப்பதி மலையில் சாதுக்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மடங்களின் மடாதிபதிகள், பீடாதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் துவக்க உரையாற்றிய திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி, இந்து சனாதன தர்மம் அனைத்து தர்மங்களுக்கும் முதன்மையான தர்மம் ஆகும் என்று கூறினார். வேறு தர்மங்களில் நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் விருப்பப்பட்டு இந்து தர்மத்தை ஏற்க முன் வந்தால் அவர்களுக்கு தேவையான இந்துக்களின் வாழ்வியல் நெறிமுறை , பூஜைகளை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து திருப்பதி மலையில் பயிற்சி வழங்க தாங்கள் தயாராக இருப்பதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்