குதிரையுடன் வந்த வினோத திருடர்கள்..பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி..நவீன காலத்தில் பழைய ஸ்டைல்

x

கடந்த 20ம் தேதி கான்பூரில் உள்ள கோயிலில் கொள்ளையடிக்கத் திட்டமிட்ட 2 திருடர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு 1 மணியளவில் குதிரையில் திருட வந்துள்ளனர்... ஒரு திருடன் குதிரை மேல் அமர்ந்து கொண்டு யாரும் வருகிறார்களா என கண்காணிக்க மற்றொரு திருடன் கோயில் பூட்டை உடைத்து திருட முயன்றார்... பூட்டைத் திறக்க முடியாத நிலையில், சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரத் துவங்கினர்... மக்கள் வருவதைப் பார்த்த 2 திருடர்களும் குதிரையுடன் தப்பி ஓடினர்... இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் சூழலில், திருட்டு பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்