சிவசேனா எம்.பி. மீது பாய்ந்த தேசத்துரோக வழக்குப்பதிவு.. வெளியான முக்கிய காரணம்..

x

பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்துகளை கூறியதாக, உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வமான நாளிதழான சாம்னாவில், பிரதமர் மோடி குறித்து சஞ்சய் ராவத் அவதூறு கட்டுரை எழுதியுள்ளதாக, பா.ஜ.க.வை சேர்ந்த நிதின் புடாடா என்பவர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், சஞ்சய் ராவத் மீது மகாராஷ்ட்ர மாநிலத்தைச் சேர்ந்த யாவட்மால் போலீசார், தேசத்துரோகம் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்