உளவுத்துறைக்கு வந்த தகவல்.. மறுநொடி பறந்த ரெட் அலெர்ட் மெசேஜ் - கழுகுப் பார்வையில் முக்கிய புள்ளிகள்

x

தமிழ்நாட்டில் உள்ள ஜெகோவா பிரார்த்தனை அரங்குகள் மற்றும் மாநாட்டு மையங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில உளவுத்துறை அனைத்து காவல்துறை உயரதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

கேரள குண்டு வெடிப்பின் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட எல்லைகளிலும் வனத்துறை பகுதிகளிலும் ரயில்வே நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பை, காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாநில உளவுத்துறை சார்பில், அனைத்து காவல்துறை ஆணையர், காவல்துறை கண்காணிப்பாளர், உளவுத்துறை துணை ஆணையர் மற்றும் ரயில்வே ஏடிஜிபி, ஐஜி, டி.ஐ.ஜி., உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மாநில உளவுத்துறை தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், ஜெஹோவாஸ் பிரார்த்தனை ஹால் மற்றும் மாநாட்டு மையங்கள் தமிழகம் முழுவதும் இருக்கிற காரணத்தினால் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, யூகே, யூரோப் மற்றும் இஸ்ரேல் தொடர்பான இடங்கள் மற்றும் தூதரகங்கள் சுற்றுலா தளங்கள், பிரார்த்தனை இடங்கள், மாநாட்டு மையங்கள் ஆகியவற்றை தீவிரமாக கண்காணிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத குருமார்கள் உள்ளிட்டோரையும் தீவிரமாக கண்காணித்து உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்