உச்சகட்ட பரபரப்பில் புதுச்சேரி.. "இன்று +2 எக்ஸாம்.." | Pondicherry | +2 Exam | Bandh

x

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட நிலையில், அதற்கு நீதி வேண்டி இந்தியா கூட்டணி சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது. சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பேரணியில் பங்கேற்றனர். அண்ணா சாலையில் தொடங்கிய பேரணி சட்டமன்றம் அருகில் நிறைவடைந்த நிலையில், அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலகக்கோரி முழக்கமிட்டனர். இதையடுத்து இன்று இந்தியா கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில், இந்தியா கூட்டணி மற்றும் அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், அத்தியாவசிய சேவைகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு அதிமுக மற்றும் இந்தியா கூட்டணி சார்பாக இன்று பந்த் அறிவித்துள்ள நிலையில், அதிகாரிகளுடன் ஆட்சியர் குலோத்துங்கன், ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசிய அவர், மாணவர்கள் இன்று அச்சமின்றி பள்ளிகளுக்கு சென்று தேர்வு எழுதலாம் எனவும், முழு அடைப்பு போராட்டத்தையொட்டி போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்