இந்திய வானிலை மையம் புதிய அலர்ட்.. கேரளாவுக்கு எச்சரிக்கை

x

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக, கேரளாவில் இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மழையுடன், மணிக்கு 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழைக்கு வாய்ப்புள்ளதால் கேரளாவில் இன்று ஏழு மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கையும், நாளை ஏழு மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கையும், 2 மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கேரளா- லட்சத்தீவு கடற்கரையில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்