குண்டுவெடிப்பு சம்பவம் : "மத்திய அமைச்சர் உட்பட யாராக இருந்தாலும்" - பினராயி விஜயன் எச்சரிக்கை

x

களமசேரி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் உட்பட யாராக இருந்தாலும், தவறான கருத்துகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.

அரசு பணிகள் தொடர்பாக டெல்லி சென்ற கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், களமசேரி குண்டுவெடிப்பை தொடர்ந்து அவசர அவசரமாக கேரளா திரும்பினார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குண்டுவெடிப்பு தொடர்பாக 20 பேர் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அதேபோல் சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரம் மேற்கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய அவர், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரன் உட்பட யாராக இருந்தாலும் தவறான கருத்துக்கள் கூறியது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்