அயோத்தி கோயிலுக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட குழந்தை ராமர் சிலை | திசையெல்லாம் ஜெய் ஸ்ரீராம் முழக்கம்

x

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் வரும் 22ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு முன்பாக, நித்திய பூஜைகள், யாகங்கள், சடங்குகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள குழந்தை ராம‌ர் சிலை பலத்த பாதுகாப்புடன், ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்க‌த்துடன் லாரியில் அயோத்தி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்த அருண் யோகி என்ற சிற்பி, இந்த சிலையை வடிவமைத்துள்ளார். சிலையை யாரும் காண முடியாத வகையில், லாரியை சுற்றிலும் திரையால் மூடப்பட்டிருந்த‌து. கிரேன் உதவியுடன் சிலை கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்