ஞானவாபி மசூதி ஆய்வு அறிக்கை - நீதிமன்றம் கெடு

x

வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் மேற்கொள்ளப்படும் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க 4 வாரங்கள் அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது. மசூதியில் ஆய்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, அறிவியல்பூர்வமான ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஆய்வை நான்கு வாரங்களில் முடித்து, அறிக்கையை சமர்ப்பிக்க வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்