ஆக்ராவை சுத்திவரும் ராட்சத பலூன் - பாதுகாப்பு துறை போட்ட அதிரடி உத்தரவு...!

x

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், வெப்பக்காற்று நிரப்பப்பட்ட ராட்சத பலூன் சவாரி தொடங்கப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக அனுமதியுடன் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. 5 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கக்கூடிய வகையில் பலூன் வடிவமைக்கப்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக 2 ஆயிரம் அடிக்குமேல் பலூன் பறக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 6 பேர் வரை ராட்சத பலூனில் பயணித்து, இயற்கைக் காட்சிகளை கண்டுகளிக்கலாம் என்றும், நபருக்கு சுமார் 13 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்