தீவிபத்தில் 8 மாத குழந்தை உள்பட 5 பேர் உடல் கருகி பலி

கேரளாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த 8 மாத குழந்தை உள்பட 5 பேர் பலியான நிகழ்வு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
x
திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவு திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இந்த தீ மளமளவென வீட்டின் மூன்று அறைகளுக்கும் பரவியதில் வீட்டில் உள்ள ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருள்கள் எரிந்து கடுமையானபுகை மண்டலம் ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மூச்சுவிட முடியாத நிலையில் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்தில் பிரதாபன், அவருடைய மனைவி செர்லி, மருமகள் அபிராமி மற்றும் பச்சிளம் குழந்தை அகில் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். நிகில் என்ற சிறுவன் பலத்த தீ காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதனிடையே இந்த தீவிபத்து குறித்து மாவட்ட ஆட்சியர், காவல் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்