"கேரள மக்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்" - பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு

"கேரள மக்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்" - பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு
கேரள மக்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன் - பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு
x
"கேரள மக்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்" - பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி உள்ளார். இதுகுறித்து பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கேரளாவின் தற்போதைய சூழல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது எனவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கேரள மக்கள் அனைவரின் பாதுகாப்புக்காக பிரார்த்திப்பதாகவும், கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்