பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி கைது - நவராத்தி விழாவில் தாக்குதல் நடத்த திட்டம்

தலைநகர் டெல்லியில் அசம்பாவிதத்தை ஏற்படுத்த இருந்த பாகிஸ்தான் தீவிரவாதியை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி கைது - நவராத்தி விழாவில் தாக்குதல் நடத்த திட்டம்
x
பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி கைது - நவராத்தி விழாவில் தாக்குதல் நடத்த திட்டம்

தலைநகர் டெல்லியில் அசம்பாவிதத்தை ஏற்படுத்த இருந்த பாகிஸ்தான் தீவிரவாதியை டெல்லி போலீசார் கைது செய்தனர். டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகளின் ஊடுருவதில் அதிகரித்த நிலையில் தீவிர கண்காணிப்பு பணியில் பாதுகாப்பு படையினரும், மாநில போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரமேஷ் பார்க் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை டெல்லி சிறப்பு படையினர் கைது செய்தனர்.   போலி இந்திய  அடையாள அட்டை வைத்திருந்த அந்த நபர் முகமது அஸ்ரஃப் அலியாஸ் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணையில் நவராத்திரி விழாவில் அசம்பாவிதம் ஏற்படுத்த இருந்தது தெரிய வந்தது. கைதானவரிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கி, கையெறிகுண்டு மற்றும் 2அதிநவீன துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்