கேரள தங்கக் கடத்தல் வழக்கு - முக்கிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தூதராக ஊழியர் சரித், சிறை அதிகாரிகள் தன்னை அச்சுறுத்துவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கேரள தங்கக் கடத்தல் வழக்கு - முக்கிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்
x
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தூதராக ஊழியர் சரித், சிறை அதிகாரிகள் தன்னை அச்சுறுத்துவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கேரளத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரகத்திற்கு வரும் பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில், தூதரக முன்னாள் ஊழியர் சரித் கைது செய்யப்பட்டுள்ளார். தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணையில் இருக்கும் அவர், காணொலி காட்சி வாயிலாக நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிறை அதிகாரிகள் தன்னை அச்சுறுத்துவதாகவும்,  முக்கிய அரசியல் தலைவர்களின் பெயரை  கூறச்சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்