"மருத்துவர்களை காக்க அரசு உறுதி பூண்டுள்ளது"- தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி, காணொலி வாயிலாக பிரதமர் உரை

மருத்துவர்களைப் பாதுகாக்க அரசு உறுதி பூண்டுள்ளதாகவும், மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களை காக்க அரசு உறுதி பூண்டுள்ளது- தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி, காணொலி வாயிலாக பிரதமர் உரை
x
தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி, இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், காணொலி வாயிலாக பிரதமர் உரையாற்றினார்.அப்போது பேசிய அவர்,கடவுளின் மறு உருவமாக திகழும் மருத்துவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இக்கட்டான சூழலில் சேவையாற்றி வருவதாக கூறினார்.மருத்துவர்களுக்கு 130 கோடி இந்தியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி,
தங்களின் அயராத முயற்சியால்,இன்னுயிரை இழந்த மருத்துவர்களுக்கு இதயபூர்வ அஞ்சலியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.கொரோனா வீரர்களுக்காக இலவச காப்பீடு திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதாக கூறிய பிரதமர்,மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் எனவும்  குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்