சர்ச்சைக்குரிய லட்சத்தீவு சட்டம்; உடனடியாக திரும்ப பெற வேண்டும் - ஜனாதிபதிக்கு விஞ்ஞானிகள் கடிதம்

லட்சத்தீவு நிர்வாக அதிகாரியால் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தை திரும்ப வேண்டும் என 60 இந்திய விஞ்ஞானிகள் கூட்டாக கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
சர்ச்சைக்குரிய லட்சத்தீவு சட்டம்; உடனடியாக திரும்ப பெற வேண்டும் -  ஜனாதிபதிக்கு விஞ்ஞானிகள் கடிதம்
x
லட்சத்தீவு நிர்வாக அதிகாரியால் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தை திரும்ப வேண்டும் என 60 இந்திய விஞ்ஞானிகள் கூட்டாக கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

லட்சத்தீவு நிர்வாக அதிகாரியான பிரபுல் கோடா பட்டேல் கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தால்,  தீவின் வாழ்வாதாரம், அடையாளமும் பறிபோகும் நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறி, மக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவரை திரும்ப பெறக்கோரி முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்டோர் பிரதமர் மோடிக்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளனர். இந்நிலையில், லட்சத்தீவு அபிவிருத்தி அதிகார சபை ஒழுங்குமுறை -2021 சட்டத்தை திரும்ப வேண்டும் என 60 இந்திய விஞ்ஞானிகள் கூட்டாக கையெழுத்திட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.  லட்சத்தீவின் சுற்றுச்சூழல், வாழ்வாதாரம், கலாசாரம் ஆகியவற்றை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு எதிராக இந்த சட்டம் உள்ளது என்றும், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட்டு சட்டத்தை திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என அதில் கோரியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்