சிவசங்கர் பாபா வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. 3 பிரிவுகளில் சிவசங்கர் பாபா மீது வழக்கு

போக்சோ சட்டம், கடத்தல், கடத்தி துன்புறுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
x
சிவசங்கர் பாபா வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. 3 பிரிவுகளில் சிவசங்கர் பாபா மீது வழக்கு

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் ஆன்லைன் மூலம் நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்தன. இதையடுத்து 3 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில், தற்போது 3 தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி போக்சோ சட்டம், கடத்தல், கடத்தி துன்புறுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். சிவசங்கர் பாபா தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் நிலையில், நெஞ்சுவலி காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிவசங்கர் பாபா தரப்பில் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்