ஆந்திராவில் குறைந்துவரும் கொரோனா பரவல் - ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வழிபாடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்ததில், சுமார் 1 கோடி ரூபாய் காணிக்கை கிடைத்து உள்ளது.
x
ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனால், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் நிலையில், நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்து 148 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். இதன்மூலம், உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் கிடைத்து உள்ளது. இதனிடையே, இன்று முதல் 5 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுவதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், நிதானமாக சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்