வாளையார் சோதனை சாவடியில் பரபரப்பு.. வட மாநில தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்

கொரோனா பரிசோதனை சான்றிதழ்கள் இன்றி கேரளாவிற்குள் நுழைய முயன்ற வடமாநில தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
வாளையார் சோதனை சாவடியில் பரபரப்பு.. வட மாநில தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்
x
வாளையார் சோதனை சாவடியில் பரபரப்பு.. வட மாநில தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்

கொரோனா பரிசோதனை சான்றிதழ்கள் இன்றி கேரளாவிற்குள் நுழைய முயன்ற வடமாநில தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அசாம், மேற்கு வங்கம்  ஆகிய மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாலக்காடு , கண்ணூர் பகுதிகளில் விவசாய பணிகளுக்காக அழைத்து வரப்பட்டனர். அவர்களை தமிழக கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் யாரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாத நிலையில், பாலக்காட்டில் இருந்து மருத்துவ குழு வரவழைக்க பட்டது. 5 மணிநேரம் பேருந்தில் காத்திருந்த தொழிலாளர்கள் உடனடியாக தொற்றை கண்டறியும் ரேபிட் ஆண்டிஜென் பரிசோதனைக்கு பின்னரே  கேரளாவிற்கு அனுமதிக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்