"மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து அத்தியாவசிய மருந்துகளும், தட்டுப்பாடு இன்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்
x
"மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல் 

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து அத்தியாவசிய மருந்துகளும், தட்டுப்பாடு இன்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என மத்திய அமைச்சர் மன்சுக்  மாண்டவியா தெரிவித்துள்ளார். டெல்லியில் உயரதிகாரிகள் உடன் ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் மன்சுக்  மாண்டவியா, இதற்காக தேவைப்படும் மருந்துகள் உற்பத்தியை நாட்டில் அதிகரித்து உள்ளதாகவும், அதேநேரத்தில் பற்றாக்குறையை எதிர்க்கொள்ள இறக்குமதி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மருந்து விநியோக சங்கிலி, இருப்பு, பற்றாக்குறை மற்றும் வாங்கும் சக்தி ஆகியவற்றையும் கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.ரெம்டெசிவிர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் எண்ணிக்கை 25 நாட்களில் 20-ல் இருந்து 60 ஆக முன்று மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளதோடு, உற்பத்தி 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா டோஸிலிசுமாப் மருந்துகளின் இறக்குமதியும் வழக்கத்தைவிட காலத்தை விட 20 மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது.செக்ஸாமித்தஸோன் மருந்துகளின் உற்பத்தியும் 6 முதல் 8 மடங்கு வரை அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மெத்தில்பிரட்னிசோலான் ஊசி மருந்தின் உற்பத்தி ஒரே மாதத்தில் 3 மடங்கும், ஐவர்மெக்டின் மாத்திரை உற்பத்தியும் ஒரே மாதத்தில் 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ஒரே மாதத்திலேயே அதன் உற்பத்தி 1.5 கோடியில் இருந்து 7.70 கோடி மாத்திரையாக அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்