கேரளத்தில் டவ் தே புயல் தீவிரம்.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட

டவ் தே புயல் காரணமாக கேரளத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், அங்கு 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் டவ் தே புயல் தீவிரம்.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட
x
கேரளத்தில் டவ் தே புயல் தீவிரம்.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட

டவ் தே புயல் காரணமாக கேரளத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், அங்கு 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.லட்சத்தீவுக்கு அருகே அரபிக்கடலில் உருவான மிகத்தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. டவ் தே என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக கேரளா முழுவதும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்பால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்தில் ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மணிமலை ஆறு, அச்சன்கோவில் ஆறு உள்ளிட்ட பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், 17-ஆம் தேதி வரை கேரளா முழுவதும் மழை தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளதால்,  திருவனந்தபுரம், எர்ணாகுளம் உட்பட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்காக பேரிடர் நிவாரண படையினர், கடற்படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்