டெல்லியில் குறைய தொடங்கிய தொற்று - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

டெல்லியில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் குறைய தொடங்கிய தொற்று - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்
x
டெல்லியில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் தினசரி தொற்று பரவல் பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கிறது என்றும்,கடந்த 24 மணி நேரத்தில் 8,500 பேருக்கே புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.டெல்லி நிலைமை முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும், கொரோனா தொற்று விகிதம் 12% ஆக குறைந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
அதே நேரத்தில்இகொரோனாவுக்கு எதிரான போர் தொடரும் என்றும், இந்த கடினாமான சூழலில் டெல்லி மக்களுக்கு பக்கபலமாக நான் இருப்பேன் எனவும் தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால்கொரொனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்