கடந்த 24 மணி நேரத்தில் 3,915 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 915 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 3,915 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு
x
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, 
ஒரே நாளில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 188 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 14 லட்சத்து 91 ஆயிரத்து 598 ஆக  உயர்ந்துள்ளது.3 ஆயிரத்து 915 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்து 34 ஆயிரத்து 83 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 31 ஆயிரத்து 507 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரையில் ஒரு கோடியே 76 லட்சத்து 12 ஆயிரத்து 351 பேர் குணமடைந்துள்ளனர். 36 லட்சத்து 45 ஆயிரத்து 164 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 16 கோடியே 49 லட்சத்து 73 ஆயிரத்து 58 பேர்  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்