மகாராஷ்டிரா ஆக்சிஜன் டேங்கரில் கசிவு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியீடு

நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கரில் ஏற்பட்ட கசிவு காரணமாக கொரோனா நோயாளிகள் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்த துயர சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரா ஆக்சிஜன் டேங்கரில் கசிவு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியீடு
x
மகாராஷ்டிராவில் உள்ள  நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கரில் ஏற்பட்ட கசிவு காரணமாக கொரோனா நோயாளிகள் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி இருந்தது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக நடந்த இந்த துயர சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. ஆக்சிஜன் டேங்கரில் இருந்து நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சென்று கொண்டிருந்த போது, டேங்கரில் ஏற்பட்ட கசிவால் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் பலர் இறக்க நேரிட்டது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்