பொதுக்கூட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி.. அனைத்து வித பேரணிகளுக்கு தடை

பொதுக்கூட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி.. அனைத்து வித பேரணிகளுக்கு தடை
பொதுக்கூட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி.. அனைத்து வித பேரணிகளுக்கு தடை
x
பொதுக்கூட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி.. அனைத்து வித பேரணிகளுக்கு தடை

கொரோனா அதிகரிப்பால் மேற்கு வங்கத்தில் அனைத்து விதமான வாகன பேரணி, பாத யாத்திரைகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.கொரோனா பரவல் காரணமாக மேற்குவங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தும், அரசியல் கட்சிகள் முறையாக பின்பற்றவில்லை என புகார் எழுந்தது. இதனால் பேரணி மற்றும் பாத யாத்திரைக்கு அனுமதி இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் 500 பேருக்கு மிகாமல் பொதுக்கூட்டத்தை நடத்தலாம் எனவும், அதில் போதிய இடவசதி, தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட வாகன பேரணிகள் ரத்து செய்யப்படுவதாக கூறியுள்ள தேர்தல் ஆணையம், இரவு 7 மணிக்கு பிறகு எந்த பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்