நிலம் இழப்பு என தூண்டப்படும் விவசாயிகள் - மத்தியஅமைச்சர் தோமர் விளக்கம்

விவசாயிகள் தங்கள் நிலத்தை இழப்பது போன்று தூண்டிவிடப்படுவதாக, வேளாண்துறைஅமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
நிலம் இழப்பு என தூண்டப்படும் விவசாயிகள் - மத்தியஅமைச்சர் தோமர் விளக்கம்
x
விவசாயிகள் தங்கள் நிலத்தை இழப்பது போன்று தூண்டிவிடப்படுவதாக, வேளாண்துறைஅமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். 

மாநிலங்களவையில் வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கம் அளித்த அவர், ஒப்பந்த பண்ணை முறை ஏற்கனவே ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில்உ ள்ளதாக கூறியுள்ளார். தவறான தகவல்களுக்கு விவசாயிகள் இரையாவதாகவும் அவர் குறிப்பிட்டள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகள் நலனுக்காகவே, பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி வேண்டுமானால், விவசாயிகளின் ரத்தத்தில், விவசாயம் செய்யும் என்றும், பாஜக ஒரு போதும் அதனை செய்யாது என்றும் தோமர் தெரிவித்துள்ளார். வேளாண் மண்டிகள் ஒருபோதும் நீக்கப்படாது என்றும், திருத்தம் செய்ய தயார் என்பதால், அதில் பிரச்சனை உள்ளது என்ற அர்த்தமில்லை என்றும் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தோமர் பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்